வியாழன், 27 ஆகஸ்ட், 2020

 "பசும்பொன் தேவர் பெருமகனாரும் பத்மஸ்ரீ சிவாஜிகணேசனும்"


திருச்சி ரெத்தினவேல் இல்லத்தில் பசும்பொன் பெருமகனார் உடல் நலம் குன்றியிருந்த போது ஒய்வுக்காகவும் வைத்தியம் மேற்கொள்ளவும் தங்கியிருந்தார். அந்நேரம் திருச்சியில் நடந்த ஒரு நாடக நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்திருந்தார். நாடகம் முடிந்த நிலையில் பசும்பொன் பெருமகனார் திருச்சியில் தங்கியிருக்கும் செய்தி அறிந்து அவரைச் சந்திக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு பெருமகனார் தங்கியிருக்கும் வீட்டுக்குச் செல்கிறார்.


தான் வந்திருப்பதாகவும் பெருமகனாரைக் காண அனுமதியும் வேண்டும் என்று பெருமகனாரின் உதவியாளரிடம் சொல்லி அனுப்புகிறார்.


"என்னைப் பார்க்க சிவாஜி கணேசனுக்கு அனுமதி என்ன வேண்டியிருக்கிறது? வரச்சொல் என்று பெருமகனார் சொன்னார். சிவாஜி கணேசன் உள்ளே வந்ததும்...


தன் நடிப்பால் தான் வெளிப்படுத்தாத ஒரு கதாபாத்திரத்தை தெய்வ சொரூபமாய் தென்பட்ட பெருமகனாரை நேரில் கண்டதும் சிவாஜி கணேசன் ஒரு கணம் எதுவும் புரியாதவராய் திகைத்து நிற்கிறார்.


"என்ன தம்பி அப்படி பார்க்கிறீர்கள்?" என்றதும் தன்னிலை உணர்ந்த சிவாஜி கணேசன் அப்போதுதான் "வணக்கம்" என்றார்.


"வாங்க வந்து இப்படி உட்காருங்கள்" என்று பெருமகனார் பற்றுடன் அழைத்துத் தன் அருகே அமரச் செய்து...


"வடக்கே எல்லோரும் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள். உங்கள் அளவுக்கு நடிகரே இல்லை என்று ஆச்சரியப்படுகிறார்கள் என்று ஒரு சாதாரண ரசிகனின் நிலையில் பெருமகனார் சொல்ல


வெள்ளைக்கார அரசாங்கமே மிரண்டு கிடந்த செயல்பாடுகளைக் கொண்ட ஒரு மாமனிதரா தன்னைப் பற்றி இப்படி சிலாகித்துப் பேசுவது என்று சிவாஜி கணேசனுக்கு ஆச்சரியம் மேலிடுகிறது.


"ஐயா இந்த தேசத்திற்கும், ஆன்மிகத்திற்கும் நீங்கள் ஆற்றிக் கொண்டிருக்கும் பணியும் சேவையும் உலகமே அறியும். அப்படிப்பட்ட உங்களைப் பல காலமாகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் காலம் இப்பொழுது தான் இடம் கொடுத்திருக்கிறது. உங்களுக்கு ஏதாவது என்னால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது. நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்க...


"தம்பி நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் (காங்கிரஸ்) வாழ்நாள் முழுவதற்கும் காங்கிரஸ்க்கும் காமராஜருக்கும் தொண்டராகவே உண்மையாக இருங்கள். காலம் எங்களை மாற்றி இருந்தாலும் நீங்கள் மாறாமல் இருங்கள். இது நம் இனத்துக்கும் பெருமை சேர்க்கும் மேலும் எனக்கு செய்யும் பரோபகாரமும் ஆகும்" என்றார்.


1967-ல் ஆட்சி மாற்றத்திற்குப் பின் எத்தனையோ இடர்பாடுகள் வந்தாலும் சிவாஜி கணேசன் காமராஜரின் உயிர் உள்ளவரையும் அவரின் ஆத்மார்த்தமான தொண்டராகவே இருந்து வந்தார்.


அரசியலில் காங்கிரசும் பார்வர்ட் பிளாக்கும் பெருமகனாரும் காமராஜரும் வேறு வேறு திசையில் இருந்தாலும் தன்னை தனக்காக பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் இப்படி சொன்னதை எண்ணி வியந்து போகிறார் சிவாஜி கணேசன்.


அப்பொழுது உதவியாளர் கொடுத்த தேனீர் உபசரிப்புக்குப் பிறகு அரசியல் பற்றி பெருமகனாரும் சினிமா பற்றி சிவாஜி கணேசனும் மணிக்கணக்கில் பேசி பிரிய மனமில்லா நிலையில் விடை பெற்றுப் போகிறார் சிவாஜி கணேசன்...


1963-ல் காலம் பெருமகனாரை பூமியிலிருந்து பிரிந்துவிட்ட நேரம் அப்போது அமெரிக்க ஜனாதிபதி கென்னடி அழைப்பின் பேரில் அமெரிக்க சென்றிருந்த சிவாஜி கணேசன் பெருமகனாரின் இறப்பு செய்தி கேட்டு கலங்கிப்போனார். அங்கு அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் சோகமாகவே காணப்பட்டார்.


சிவாஜி கணேசன் நாடு திரும்பியபோது விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு போன் செய்து தனக்கு ஒரு வேட்டியும் சட்டையும் கொண்டுவரச் சொன்னார். வீட்டிலுள்ளவர்களுக்கு என்னவென்ற விவரம் புரியவில்லை. பாராட்டு விழாவில் கலந்து கொள்ள தஞ்சையிலிருந்து அவரது தாயார் ராஜாமணி அம்மாள் அவர்கள் வந்திருந்தார்கள்.


எத்தனையோ வரவேற்புகள் காத்திருந்தன. தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் மிகப் பிரமாண்டமான பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் தனக்காக காத்துக் கொண்டிருப்பதை வீட்டார் மூலம் அறிந்த சிவாஜி கணேசன் நடிகர் சங்கத்துக்கு வந்து திரு. எம்.ஜி.ஆர் அவர்களிடம் மட்டும் மாலையைப் பெற்றுக் கொண்டு நடிகர் சங்க மேக்அப் அறையில் கோட்சூட் இருந்து வேட்டி சட்டைக்கு மாறி அங்கிருந்து நேராக பசும்பொன்னில் நடைப்பெற்ற பெருமகனாரின் 16-ம் நாள் காரியத்தில் கலந்துகொள்ளச் சென்றா...


பெருமகனாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று சிவாஜி கணேசன் கேட்டது தன் மனதில் கணத்துக் கொண்டிருந்தது.


மறவர்களின் முகத்துவாரப் பகுதியான ஆப்பனூரில் பெருமகனாருக்கு ஆளுக்கு மேலுயர வெண்கலச் சிலையை தன் சொந்தச் செலவில் நிறுவி தன் மன கணத்தை நீக்கிக் கொண்டார் சிவாஜி கணேசன். அச்சிலையை அப்போதைய கவர்னர் திரு. மோகன்லால் சுகாதியா திறந்து வைத்தார்.


இச்சிலை நிறுவப்பட்டதைப் பற்றி ஒரு சிறு விபரம்:


சிவாஜி கணேசனின் திவிர ரசிகரான ஆப்பனூரைச் சேர்ந்த வெற்றிமாலை கோவிந்தத் தேவர் என்பவர் சிவாஜி கணேசன் நடித்து வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் பார்த்துவிட்டு நேரிடையாக சென்னை சென்று அவரிடம் விமர்சித்து பேசுவது வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.


அப்போது சிவாஜி கணேசன் அவர்கள் "நான் பார்த்த ரசிகர்களிலேயே நீ ஒருவன்தான் பளிச்சென்று தெரிகிறாய் பல விஷயங்களைக் கூறுகிறாய். உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமே" என்று கேட்கிறார்.


வெற்றிமாலை கோவிந்தத் தேவர் "நீங்கள் நன்றாக இருந்தால் போதும் எனக்கு ஒன்றும் வேண்டாம்" என்று கூறிவிடுகிறார்.


அதற்கு சிவாஜி கணேசன் " ம்... நீ சொந்தக்காரப் பய அதனால ஒண்ணும் வேணாங்கிரியாக்கும்" என்று கூறி அனுப்பி வைக்கிறார்.


பெருமகனார் மறைவுக்குப் பிறகு சிவாஜி கணேசன் பெயர் நம் பகுதியில் காலம் முழுவதும் இருக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் வெற்றிமாலை கோவிந்தத் தேவர் அவர்கள் சிவாஜி கணேசனிடம் சென்று "ஐயா நான் வரும்போதுதெல்லாம் என்ன வேண்டும் என்று கேட்பீர்களே இப்போது நான் ஒன்று கேட்கிறேன் செய்வீர்களா???" என்றார்.


அதற்கு சிவாஜி கணேசன் "வாய்யா சொந்தக்காரா கேளுய்யா என்னய்யா செய்யணும்? கேளுய்யா" என்றார்.


"எங்கள் ஊர் ஆப்பனூரில் தேவர் பெருமகனார் சிலையை நிறுவ வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்" என்று கேட்க அதற்கு சிவாஜி கணேசன் "இது உன் சொந்த விஷயம் இல்லையே பொதுவாக கேட்கிறாய் இருந்தாலும் நானும் தேவர் அய்யா அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை அந்த சிலையை நிறுவ என்ன செலவானாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லூகிறார்.


அதற்கு வெற்றிமாலைத் தேவர் "சிலை ஏற்பாடு செய்தால் மட்டும் போதாது சிலை திறப்பு விழாவுக்கு நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும்" என்று கேட்டதன்படி.


26.5.1975-ல் பெருமகனார் சிலை நிறுவ இராமநாதபுரம் ராஜா காசிநாததுரை அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை ராஜா விஜய ரகுநாத தொண்டடைமான் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.


அதன்படி சிலை அமைத்து தேவர் பெருமகனார் சிலையை திரு. சிவாஜி கணேசன் தலைமையிலும் தமிழக அரிஜன நலத்துறை முன்னாள் மந்திரி திரு. கக்கன் முன்னிலையிலும் தமிழக கவர்னர் திரு. மோகன்லால் சுகாதியா அவர்கள் திறந்து வைத்தார்.


அப்பிரமாண்ட சிலை திறப்பு விழாவில் தேவர் பெருமகனாரின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் வீற்றிருந்த திரு. பி.கக்கன் அவர்களைப் பார்த்து மக்கள் பலத்த எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.


இந்த பதட்டமான சூழ்நிலையில் மேடை ஏறிய சிவாஜி கணேசன் பெருமகனாரின் தொண்டர்களைப் பார்த்து கையால் வாயை பொத்தி சைகை காண்பித்து தலைக்கு மேல் இரு கரம் கூப்பி அமைதி காக்கும்படி சைகை காட்டினார். தன் சொந்தம் சைகை காட்டுவதைப் பார்த்து பொங்கிய கடல் அலைபோல் இருந்த ஜன சமுத்திரம் அமைதி காத்து தரையில் அமர்ந்தது 


இந்த எதிர்ப்பு சம்பவம் நடப்பதற்கு காரணம் என்னவென்றால் 1957-ல் இராமநாதபுரம் பகுதியில் உள்ள அரிஜன கிராமங்களுக்கு சென்று "நீங்கள் மறவர்களை எதிர்த்து கலவரம் செய்யுங்கள் அவர்களது உடமைக்குத் தீ வையுங்கள் வெட்டுக்குத்துக்களை நிகழ்த்துங்கள் போலீஸ் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காது அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் உங்களுக்கு பக்கபலமாக நானிருக்கிறேன். என்று திரு. பி.கக்கன் துர்பிரச்சாரம் செய்ததன் காரணமாகதான் முதுகுளத்தூர் கலவரம் ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டும் நேரில் பார்த்தும் சொல்லக் கேட்டும் இருந்த மறவர் கூட்டம்தான் சிலை திறப்பு விழாவில் எதிர்ப்பைக் காட்டியது.


1957-ல் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது திரு. கக்கனிடம் நேரடியாக அரிஜனங்களை கலவரத்துக்கு தூண்டியது பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது அவரால் பதில் சொல்லமுடியாமல் தடுமாறினார்.


தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக பாவித்த தேவர் பெருமகனார் அரசியலில் புனிதம் காட்ட வந்த தெய்வம் மனிதரில் மகான்...

சனி, 24 பிப்ரவரி, 2018

உட்பிரிவுக்கு வைப்போம் முற்றுப்புள்ளி

ஒரு குரூப் கள்ளர்கும் மறவர்கும் சண்டை போடவைக்க ஒரு குரூப் இருக்கு
மன்னாதி மன்னர்   இராசராச சோழன் திருவிழாக்கு தெற்கில் இருந்து யாரும் வரவில்லை

அதனால் இனிமேல் பசும்பொன் ஐயா திருவிழாவிற்கு கள்ளர் வரமாட்டார்கள்
தெற்கில் உள்ள கள்ளர் பசும்பொன் செல்லக்கூடாது என்று ஒரு முகநூலில் ஒரு பத்தி பார்த்தேன்.

நான் இந்த இடத்தில் நான் ஒரு கள்ளர் மறவர் அகமுடையார் என்று   சொல்லப்போவது  இல்லை.

நானும் என்னுடைய நண்பனும் அவனும் தேவர்மகன் தான்.
ஏன் பங்காளி இப்படி பண்றங்க நம் உறவுகள்
அதுக்கு அவன் சொன்னான் தப்பு நாம பக்கம் தான் என்ன சொல்லுற நீ!
பசும்பொன் ஐயா பத்தி தப்பா சொன்ன? அவன் எப்படி தேவனா இருக்க முடியும் . போஸ்ட் போட்டவன் Fake ID தான் இருக்க முடியும்

பசும்பொன் ஐயாவும் எங்களுக்கு சாமி தான் தேவர் தந்த தேவர் உறங்க புலி ஐயா மூக்கையா தேவர் எங்களுக்கு சாமி .

தன்னை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைதுரைகாக்க தன்னுடைய உயிரை கொடுத்த மேதகு மருதுபாண்டியரும் எங்களுக்கு சாமி

யாரவது உட்பிரிவு பேசுனா அவன் விடுங்க.
எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுங்க  என்னதான் நீங்க வேப்பமரத்தில் தேனும் நெய்யும் ஊற்றினாலும் கசப்பு தன்மை  மாறப்போவது இல்லை.அது போலத்தான் இந்த உட்பிரிவு பேசுபவர்கள்

உட்பிரிவு  பேசுபவர்களை விட்டுத்தள்ளுங்கள்  அதே  ஊருல 1000 பேரு நாம முக்குலத்தோர் நாம மக்கள் நல்ல படிக்கணும் பொருளாதரலில் நல்ல நிலைமைக்கு போகணும் நினைப்பான் அவன்கூட சேர்ந்து ஏதாவது பண்ணுங்க இந்த தேவர் இனத்துக்கு அத விட்டு உங்களுக்கு உள்ள சண்டை போட்ட வேற ஓருவன் வந்து உங்க பல்லை பிடித்து பதம் பார்க்க நேரிடும்

குறிப்பு : கள்ளர் என்றால்  திருடர் யாரவது சொன்ன அவர்களுக்கு கள்ளர் பற்றியும் தெரியல தமிழ் பற்றியும் தெரியல அதுதான்  உண்மை.

நம் மக்கள் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் எங்கள் அன்பும் வீரம் மிக உறவுகளே 

இராசராச சோழன் சதய விழாவிற்கு பாசம் உள்ள பாண்டியர் சீமையும் அவர்களுடை சகோதரர்கள் சேது சீமை நெல்லை சீமை மக்கள் வருவார்கள் பாருங்கள்.

அன்புடன் உங்கள்
தேவர் மகன்
எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்

புதன், 3 ஜனவரி, 2018

நீங்கள் தேவர் இனமா அல்லது அதிமுகவா ?

றவர்களின் பிம்பம் அல்ல ஐயா ஒபிஸ்
ள்ளர்களின் பிம்பம் அல்ல சின்னாம்மா சசிகலா மற்றும் அண்ணன் தினகரனும்.


அவர்கள் அவர்கள் சார்ந்த காட்சிக்காக போராடுகிறார்கள்
தேவர் இனத்துக்காக அல்ல அதை நாம் உறவுகள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

பசும்பொன் ஐயா மற்றும் ஐயா மூக்கையா தேவர் இவர்கள் இருவரையும் பிரித்துப்பார்க்காத நீங்கள் ஏன் ஐயா ஒபிஸ் மற்றும் சின்னாம்மா சசிகலா,அண்ணன் தினகரன் அவர்களுக்காக ஏன் சண்டைபோட வேண்டும்?

ஐயா மூக்கையா தேவர் செய்ததை போலவா தேவர் இனத்திற்கு இவர்கள் செய்து விட்டார்கள் ?
இல்லை பசும்பொன் ஐயா போல தனது சொத்துக்களை அள்ளி அள்ளி கொடுத்தார்களா ?
இல்லையே!

நாம் சண்டை போட்டுகொண்டு இருந்தால் பிறகு மற்றவர் நம்மை ஆள நேரிடும்
ஐயா ஒபிஸ் மற்றும் திருமதி சின்னம்மா சசிகலா,அண்ணன் தினகரன் அவர்களின் மீது நீங்கள் பாசம் வைத்து உள்ளீர்கள் நான் பெருமைப்படுகிறேன்
என் உறவுகள் இனத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள்
உங்களுக்காக அவர்கள் போராடவில்லை என்பது ஏன் புரியவில்லை உங்களுக்கு?
நம் இனத்தை முன்னோக்கி செல்ல முயலுங்கள்
உங்கள் முடியும் உங்களால் மட்டுமே முடியும் என் அன்பு உறவுகளே

இந்த காணொளியை பாருங்கள் உறவுகளே 


 தேவர் மகன்
எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்

சனி, 30 டிசம்பர், 2017

ஆவண கொல்லைனு சொல்லுறாங்க

ஆவண கொல்லைனு சொல்லுறாங்க 


நீங்க நல்ல யோசித்து பார்த்தீர்கள் என்றால்

அன்று இன்று தான் தாய்நாட்டுக்கு உயிர் தியாகம் செய்த நம் இனத்தில் பிறந்த மக்கள் மற்றும் மாற்று சமுதாய மக்கள் செய்த உயிர் தியாகம் இவர்கள் கண்ணில் படுவது இல்லை

இதற்கு முன் தர்மபுரியில் இறந்த ஒரு தலித் இளைஞன் இவர்களுக்கு போராளியாகத்தான் தெரிவான்
இப்பொது ஒரு பெண்  போராளி ஆகிவிட்டார்

ஒரு கதை சொல்லடா
ஒரு நடுத்தர குடுப்பதின் தேவரின இளைஞனின் வாழ்கை எப்படி இருக்கும்

அவன் ஆசைப்பட்டது ஏதும் கிடைத்து இருக்காது

ஆசைப்பட்டது கிடைக்கவில்லையே என்றும் அழுவதற்கும் நேரம் இல்லாமல் உழைத்துக்கொண்டு இருப்பான்

ஒருகட்டத்தில் அயல்நாடு செல்வான்

அவனின் தங்கைனின் திருமணத்திற்காக உழைத்து ஓடையி  போவான்

அடுத்து தங்கைனின் திருமணத்திற்காக வாங்கிய கடனுக்கு உழைப்பான்

அவன் நேசித்த முறை பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு நடைபெறும்   ஆனால் மாப்பிளை தன வேறுயாரோ
அதற்காக அழுவதற்கு நேரம் இல்லை

கடைசில் வீட்டில் பார்த்த ஒரு பெண்ணை திருமணம் செய்வான் தன் குடுப்பத்திற்காக தன் "தந்தை சொல்மிக்க மாத்திரம் இல்லையே" என்ற காரணத்திற்காக 

ஏன் தன் குடுப்பார்த்திக்காக தன் உயிரை கேட்டாலும் தர தயாராக இருப்பான்

அவன் தன் மனுசன்
பெத்த அப்பனா தூக்கு அனுப்பிட்டு போராளி  நீங்க?

தியாகத்தில் இதுதான்   போராளியே  உருவாகிறார்கள்

போராளிகள் என்றால் நேதாஜி பிரபாகரன் போன்றவர்கள்தான்
தோட்டத்தில் இருக்கும் பழம் யாருக்கு சொந்தம் உரிமையாளருக்கு.
திருட்டுத்தன எடுத்த பழத்துக்கு உரிமையாளர்  என்ன செய்வர்  எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லுவாரா?
செய்ய  வேண்டியதை  தான்  செய்வர்
 அவர் தன் பெண்ணை பற்றி அவர் கண்ட கண்ணாவு  என்னவாகும்

தகப்பனுக்கு தன் அந்த வலி தெரியும் .

திங்கள், 18 டிசம்பர், 2017

ஆடி 18 தாய் மாமன் தினம் கிழக்குச் சீமை

இந்த நாடுலையே இந்த ஒத்த கூடத்துக்கு மட்டும்தாயா தாயிமாமன்னன்ங்கர உரிமையும் பெருமையும் இருக்கு.ஒரு காலத்துல இந்த மண்ண காக்க சண்டைக்கி போன நாம பயக பொன்னடடி புள்ளைய யாரா நம்பி விடுது போனாய்ங்க அவன் அண்ணனா நம்பி விட்டுட்டு போகல.அவன் தம்பி நம்பி விட்டுட்டு போகல. ஏன் பெத்த அப்பன நம்பி விட்டுட்டு போகல.அவ பொறந்த வீடுல அவங்க அண்ணன் நம்பி விட்டுபோனான்.ஏன் சண்டைக்கி பொண்ண பய வராம செத்துபோயிட்டான் வச்சுக அவளுக்கு அப்பனகவு அவ பெத்த புள்ளைகி தாயிமாமனகவும் இருந்து கடைசி வரைக்கும் கட்டி காப்பது வனுன்ர நம்பிகைலயதாயா அதே தங்கச்சிகி ஒரு புள்ள பொறந்த மொத சேனைய சீனிபால் வச்சு பசிய போகுறவன் தாயா தாயிமாமன்னன். தாயிமாமமே சேன தொட்டுவச்சதுகு அப்புறத்தேன் பெத்த தாயே பால் குடுக்குற அந்த புள்ளைகி ஒரு காதுகுத்துன தன மடியல உக்காரவச்சு சீர் செஞ்சு இருக்க எடம் கொடுக்குறான்தாயா தாயிமாமன்னன் அதே புள்ள வளந்து ஆள்ளயி இருக்குறப ஒரு ஓலைக்குடிசை கட்டிக்குடுத்து தாயிமாமன்னன் நா இருக்கேன் தைரியமா இருன்னு சொல்லுறனே அவன்தாய தாயிமாமன்னன்.அதே தங்கச்சிகி கூன் குருடுனு புள்ள பொறந்த இந்த ஊருல இருக்குற ஒரு பய கட்டமாட்டன் அத ஒரு சுதந்திர பொண்ண நெனச்சு தன் மகனுக்கு உரியிமை எடுத்து கட்டிவச்சு காத்து தன் உயிரையே குடுகுரவந்தாயா
இப்படி என் தங்கச்சி இவன் வீடுக்கு போன்னதுல இருந்து புள்ள பெத்ததுல இருந்து காதுகுத்துன இருந்து இன்னைக்கி சமஞ்சு குத்தவச்ச வரைக்கும் சீர் செஞ்சு செஞ்சு இத்து புத்த போனந்வதாதயந்த தாயிமாமன்னன்



எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்

எந்த கஷ்டம் வந்தாலும் தன்னை விட்டுக் கொடுக்காதவன், பின்னுக்கு போகாதவன்

 *** தேவர் ***

ஞாயிறு, 2 ஜூலை, 2017


உறவுகளுக்கு  என்னது அன்புகலந்த வணக்கங்கள்!

உறவுகளே!

உட்ப்பிரிவு பேசும் சில உறவுகளுக்கு!
 

ரு காலை பொழுது ஒரு பேருந்து பழுதாகி நின்றுவிட்டது.அந்த நேரத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் அந்த கிராமத்தை சார்ந்தவர் போல.அவர் அந்த பேருந்து நடத்துனரிடம் பேருந்து பழுதாகி நின்றுவிட்டதே.இன்று உணவுக்கு தங்குவதுக்கு என்ன செய்ய போறீர்கள் என்று கேட்க .நடத்துனர் சொன்ன பதில் இந்த ஊரில் இருப்பவர்கள் என்னுடைய உறவுகள்  என் இனம்.

என்னக்கு எந்த வீட்டிதிலும் உணவு  உண்டு தம்பி என்று என்று சொல்ல இப்படி பேசிக்கொண்டு அந்த நடத்துனர் பேருந்தில் பழுது பார்க்க பேருந்தின் அடிபகுதியில் பழுது பார்த்துக்கொண்டு  இருக்கும் அந்த சமயத்தில் அந்த நடத்துனர் தலையில் அடிபட அந்த ஆட்டோ ஓட்டுநர்  விரைந்து வந்த அந்த நடத்துனரை  ஏற்றிக்கொண்டு மருத்துவமனை விரைந்தார். நடத்துனர்க்கு சிறிய காயம் மட்டும் தலையில்.அவர்கள் மூவரும் பேருந்து பழுதாகி நின்ற கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர் அப்போது ஆட்டோ ஓட்டுநரிடம் இவ்வளவு  தம்பி ஆட்டோவுக்கு என்று கேட்க அப்பொழுது ஆட்டோ ஓட்டுநர் அந்த நடத்துனரிடம் இந்த கிராமத்தில் இருப்பவர்கள் உங்கள் உறவுகள் உங்கள் இனம் என்று சொன்னிர்கள் இப்பொழுது இவ்வளவு  தம்பி ஆட்டோவுக்கு என்று  கேட்கிறீர்கள் நான் இந்த கிராமம்  தான் உங்கள் தம்பியும் கூட .ஒரு  அண்ணனிடம்  ஒரு  தம்பி  இதற்கெல்லாம் பணம் வாங்குவது இல்லை.வாங்க இன்று நம்  வீட்டில் தான் உங்களுக்கு உணவு என்று  மூவரும்  நகர்ந்தனர்.

அந்த நடத்துனர் ஒரு அகமுடையார் இனத்தை  சார்ந்தவர்

அந்த ஆட்டோ ஓட்டுநர் மறவர் இனத்தை  சார்ந்தவர்

உட்பிரிவு பேசும் உறவுகளே

நீங்கள் கள்ளராக இருங்கள்


நீங்கள் மறவராக   இருங்கள்


நீங்கள் அகமுடையராக  இருங்கள்


அனால் இனம் என்று வந்துவிட்டால் தேவராக ஒன்றுகுடுங்கள்

நாம்  ஒரு அணியாக  இருந்தால் எப்படி பட்ட  படை வந்தாலும் அதை தகர்த்து எரியக்கூடிய  வல்லமை  படைத்தஇவர்கள் நாம் என்று மறவாதீர்கள் .

 -
தேவர் மகன்